நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் சீரான காலநிலை நிலவும் சாத்தியம்
நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் சீரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் காலி தொடக்கம் மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
காற்று வடமேற்கு அல்லது தென்மேற்கு திசையில் மணிக்கு 20 தொடக்கம் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்.
கடல் கொந்தளிப்பு
காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையிலும் கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளும்
அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்
தெரிவித்துள்ளது.