அரச நிறுவனங்களில் செயிரி வாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்வு!
அரச நிறுவனங்களில் செயிரி வாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து மாவட்ட செயலக அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு இன்று (01) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார தலைமையில் தலைமையில் நடைபெற்றது.
அரசாங்க நிறுவனமொன்றில் கடமையாற்றும் அலுவலர்களுக்கு தமது கடமைகளை முறையாகவும் சுதந்திரமாகவும் நிறைவேற்றுவதற்கு உகந்த வகையில் சுத்தமானதும், சுகாதார பாதுகாப்புள்ளதுமான, ஆபத்துக்கள் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குவது ஒவ்வொரு நிறுவனத் தலைவரினதும் பொறுப்பாகும்.
அத்தகைய சூழல் சேவைப் பெறுநர்களின் மத்தியிலும் அலுவலகத்தைப் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்தும்.
சுதந்திரமான வேலைச் சூழல்
அரசாங்க நிறுவனங்களில் காணப்படும் வரையறுக்கப்பட்ட இடப்பரப்பை பயனுள்ளதும் வினைத்திறனானதுமான முறையில் பயன்படுத்துவதற்கும், அலுவலர்களுக்கு அமைதியான மற்றும் சுதந்திரமான வேலைச் சூழலை உருவாக்குவதும் அவசியமாகும்.
அதற்கான ஒரு நடவடிக்கையாக ஒவ்வொரு அரசாங்க நிறுவனத்திலும் குவிந்துள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்காக "செயிரி வாரம்" பிரகடனப்படுத்தி செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக இந்நிகழ்ச்சித்திட்டமானது திருகோணமலை மாவட்ட செயலகத்திலும் செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01 ஆம் தினத்திலிருந்து 04 ஆம் தினம் வரையில் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.





லண்டனில் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: பொலிஸார் முகத்தில் குத்திய போராட்டக்காரர்கள்! News Lankasri

சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்- பிக்பாஸ் பிரபலங்களுக்கு குவியும் வாழ்த்துகள் Manithan
