ஏலத்தில் விடப்பட்டுள்ள இலங்கை! சஜித் குற்றச்சாட்டு
தற்போது இலங்கை ஏலத்தில் விடப்பட்டுள்ள நிலையிலுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க் கட்சியின் தலைவருமாகிய சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொறுப்பற்ற அரசாங்கத்தினால் முழுநாடும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும், நண்பர்களுக்கு தேசிய வளங்களை விற்பனை செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய அரசாங்க காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள கட்டடங்கள் சிலவற்றினை தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,