பதவி விலக தயாராகின்றார் மத்திய வங்கி ஆளுநர்!
மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதற்கு பேராசிரியர் டபிள்யூடி லக்ஷ்மன் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படவுள்ளது. பதவி விலகியதும், அவர் சர்வதேச நாணய நிதியத்தில் உயர் பதவி ஒன்றை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்படி, விரைவில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளில் இருந்து விலகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri