நாயால் வந்த வினை! - அண்ணனை கொடூரமாக கொன்ற தம்பி
தனது மூத்த சகோதரனை கொடூரமாக தாக்கி கொன்ற இளைய சகோதரனை பனாமுர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த சகோதரனின் மற்றைய சகோதரனின் வீட்டு நாய் கடித்தமையே கொலைக்கான பிரதான காரணம் என பனாமுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையை நாய் கடித்ததால் ஆத்திரமடைந்த மூத்த சகோதரர், தம்பியின் வீட்டிற்கு சென்று தம்பியின் மனைவியை தாக்கியுள்ளார்.
இதையறிந்த தம்பி அண்ணின் வீட்டுக்குச் சென்று அண்ணனை அரிவாள் மற்றும் கோடாரியால் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் எம்பிலிப்பிட்டிய, முலதியாவல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பனாமுர பொலிஸார் சந்தேக நபரை கத்தி மற்றும் கோடரியுடன் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த சந்தேக நபரின் மனைவி எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பனாமுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam