அடக்கம் செய்யப்பட்ட யுவதியின் சடலம் தோண்டி எடுப்பு
பண்டாரவளை, பிந்துனுவெவ பகுதியிலுள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட யுவதி ஒருவரின் சடலம் மீளத் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று பண்டாரவளை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சடலம் இன்று (07.01.2024) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிந்துனுவெவ, படுலுகஸ்தென்ன பகுதியில் வாழ்ந்த 25 வயதுடைய ரஷ்மிகா நதிஷா என்ற யுவதி நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்த நிலையில் அவரின் சடலம் கடந்த 4 ஆம் திகதி அடக்கம் செய்யப்பட்டது.

களைக்கப்பட்ட ஆடைகள்
எனினும், குறித்த யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மயானப் பகுதியில் போடப்பட்டுள்ளதை யுவதியின் உறவினர் ஒருவர் இன்று கண்டுள்ளார்.
அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தார். அதன்பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் குழுவொன்று, விசாரணைகளை நடத்தியது. யுவதி புதைக்கப்பட்ட இடத்தில் குழி மீளத் தோண்டப்பட்டு, சவப்பெட்டியின் மேல் பகுதி திறக்கப்பட்டு, உள்ளே இருந்த சடலம் வெளியே எடுக்கப்பட்டு ஓரமாக வீசப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் ஆடைகள் களையப்பட்டு சடலம் நிர்வாணமாகவே இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் ஆலோசனையின் பிரகாரம், இது தொடர்பில் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்துக்குத் தகவல்கள் வழங்கப்பட்டு, மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பதில் தலைமையகப் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.கே.பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 2 மணி நேரம் முன்
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri