இந்த மாதம் திருமணமாகவிருந்த இளைஞரே நாயாற்று பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்
இந்த மாதம் திருமணமாகவிருந்த இளைஞரே நாயாற்று பகுதியிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வவுனியா - மரக்காரம்பளையை சேர்ந்த இளைஞர்கள் நால்வர் முல்லைத்தீவுக்கு சென்ற நிலையில் நாயாறு பகுதியில் நீராடியுள்ளனர்.
அதன்போது, நீரோட்டத்தில் சிக்கிய நிலையில் மரக்காரம்பளையை சேர்ந்த கருணாரத்தினம் ஜெயசாந்தன் (வயது 29) என்ற இளைஞர் காணாமல்போயிருந்தார்.
இந்த நிலையில் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் பின்னர் குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞருக்கு எதிர்வரும் 24ஆம் திகதி திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்ததாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri