இந்த மாதம் திருமணமாகவிருந்த இளைஞரே நாயாற்று பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்
இந்த மாதம் திருமணமாகவிருந்த இளைஞரே நாயாற்று பகுதியிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வவுனியா - மரக்காரம்பளையை சேர்ந்த இளைஞர்கள் நால்வர் முல்லைத்தீவுக்கு சென்ற நிலையில் நாயாறு பகுதியில் நீராடியுள்ளனர்.
அதன்போது, நீரோட்டத்தில் சிக்கிய நிலையில் மரக்காரம்பளையை சேர்ந்த கருணாரத்தினம் ஜெயசாந்தன் (வயது 29) என்ற இளைஞர் காணாமல்போயிருந்தார்.
இந்த நிலையில் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் பின்னர் குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞருக்கு எதிர்வரும் 24ஆம் திகதி திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்ததாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam