விடுதலைப் புலிகள் மீதான தடை மகிழ்ச்சியளிக்கின்றது! - இலங்கை அரசு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிக்க பிரித்தானியா மேற்கொண்ட தீர்மானம் மகிழ்ச்சியளிப்பதாக வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பயங்கரவாதம் தொடர்பில் அனைத்து நாடுகளும் தெளிவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடரில் தாம் இணைய வழியில் கலந்துகொள்ளவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதன்போது நாட்டின் அனைத்து துறைகளிலும் பெறப்பட்ட பாரிய முன்னேற்றம் தொடர்பிலான உண்மை நிலையை முழுமையாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை, விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை, தொடர்ச்சியாக நீடிக்க பிரித்தானிய உள்துறை அமைச்சர் முடிவு செய்துள்ளதாக இலங்கை அரசிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
