அகதியாக எருமைகளுடன் வந்த யானைக்குட்டி
பொலன்னறுவை மகாவலி ஆறு மற்றும் திவுலான வில்லுவ அணைக்கட்டு நிரம்பி வழிவதால் தமது கூட்டத்திலிருந்து பிரிந்த காட்டு யானைக்குட்டி ஒன்று, எருமை மாடுகளின் கூட்டத்துடன் திவுலான கிராமத்தில் உள்ள மாட்டுத்தொழுவத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4-5 வயதுடைய சுமார் 5 அடி உயரம் கொண்ட இந்த யானைக் குட்டி, சோமாவதி காப்புக்காட்டில் வழமையாக உலாவித்திரிவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற வானிலை
இந்தநிலையிலேயே சீரற்ற வானிலை காரணமாக, தமது கூட்டத்தில் இருந்து பிரிந்து,திவுலான கிராமத்தில் உள்ள மாட்டுத் தொழுவத்திற்கு எருமைக் கூட்டத்துடன் வந்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள், மன்னம்பிட்டிய வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்ததையடுத்து, குறித்த யானைக்குட்டியை காட்டுக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக வனஜீவராசிகள் அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam