யாழில் இரவில் நடந்த அடாவடித்தனம்! பௌத்த துறவி ஒருவர் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான தகவல்
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அகற்றியமை தொடர்பில் பௌத்த துறவி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் இந்தரதன தேரர் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
இந்த நினைவுசின்னம் தடை செய்யப்பட்டால் இது முன்னர் அகற்றப்பற்றிருக்கலாம் ஆனால் அது நடக்கவில்லை.
ஆனால் இந்த நினைவுசின்னம் மக்களின் இதயங்களில் வேருன்றியது பின்னர் அகற்றப்பட்டது என்பது ஒரு பிரச்சனை.
நம் நாட்டைக் கைப்பற்றிய வெளிநாட்டிரனின் பெயரிடப்பட்ட பல கட்டிடங்களும், வீதிகளும், நகரங்களும் சிலைகளும் நம் நாட்டில் உள்ளன.
அவர்கள் நம் நாட்டிக்கு செய்த அழிவு மகத்தானது. ஆனால் யாரும் அவர்களை எதிர்க்கவில்லை.இந்த நினைவுசின்னத்தின் அழிவு அனியாயமானது.
இது எந்த இன பாகுபாடும் இல்லாமல் இதை கவனிக்க வேண்டும். இது இனவெறியின் நெருப்யை புதுப்பிக்ககக்கூடிய ஒரு செயல். அத்தகைய தீ உடனடியாக தொடங்கலாம் ஆனால் வெளியேற்ற நேரம் எடுக்கும்.
அதை நாம் அனைவரும் அனுபவத்திலிருந்து அறிவோம். "எல்லோரும் சரியாக இல்லை ஆனால் அவர்களின் சொந்த தவறுகளை சரிசெய்ய முடியும் என தேரர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.