சீரற்ற காலநிலையால் அனர்த்தம் - படையினரை களமிறங்குமாறு இராணுவ தளபதி உத்தரவு
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லுமாறு இராணுத்தினருக்கு, இராணுவத் தளபதி ஜெனரல் விக்கும் லியனகே பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய, உலப்பனை தவத்தந்தன்ன வீதியில் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களை அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இலங்கை இராணுவத்தின் முதலாது படையணியின் 58 ஆவது படைப்பிரிவின் 5 ஆவது விஜயபாகு படைப்பிரிவின் படையினர் ஈடுபட்டனர்.
மேலும், மொரப்பே ரன்வந்தலாவ பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு படகு மூலம் அழைத்துச் செல்லும் பணியையும் படையினர் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், தியகல விதுலிபுர பிரதேசத்தில் மண்சரிவினால் உயிரிழந்த நபரின் சடலத்தை இராணுவத்தினர் கண்டுபிடித்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan