இஸ்ரேலுடன் நிற்கும் இந்தியா.. மோடிக்கு சிறப்பு நன்றி தெரிவிக்கும் நெதன்யாகு
இஸ்ரேலுடன் நின்றதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்த நெதன்யாகு, "எங்கள் சிறந்த நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன்.
நேற்று நான் அவருடன் நீண்ட நேரம் பேசினேன், இஸ்ரேலுடன் அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கும், உண்மைக்காக நின்றதற்கும், இந்திய மக்களின் மகத்தான நட்புக்கும் நன்றி தெரிவித்தேன்.
உடன் நிற்கும் மோடி
அவர்கள் இஸ்ரேலில் மிகவும் போற்றப்படுகிறார்கள், நேசிக்கப்படுகிறார்கள். உரையாடலின் விவரங்களுக்குள் நான் செல்லமாட்டேன், ஆனால் நான் அவருடன் பேசியுள்ளேன். மேலும் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள பல தலைவர்களுடன் பேசியுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவும் இஸ்ரேலும் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் மக்களிடையேயான தொடர்புகளிலும் ஆழமான உறவுகளைக் கொண்டுள்ளன.
இன்று முன்னதாக, ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டு நடவடிக்கை, ஈரானியர்கள் தங்கள் தலைமையை வெளியேற்றுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது என்றும், அதற்கான நேரம் நெருங்கி வருவதாகவும் இஸ்ரேலிய பிரதமர் கூறினார்.
மௌனம் காக்கும் மோடி
இந்நிலையில், ஈரானிய முன்னாள் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமெனியின் மரணம் குறித்தும் இந்தியா எவ்வித கண்டனமும் வெளியிடவில்லை.

இதன் காரணமாக, இந்திய அரசியல் பரபரப்பில் இது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களில் அலி கமெனியின் மரணம் இந்தியாவில் தீவிர அரசியல் விவாதத்தைத் தூண்டியுள்ளதாக பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசாங்கத்திடமிருந்து இவ்விடயம் தொடர்பில் முறையான அறிக்கையை எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. அதிகரித்து வரும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் ஒரு ஆய்வு செய்யப்பட்ட மௌனத்தைக் கடைப்பிடித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேசத்தில் ஏற்பட்ட பெரும் பயண குழப்பம்! பரபரப்புக்கு மத்தியில் 149 பயணிகளுடன் வந்திறங்கிய விமானம்
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri