நாட்டில் மற்றுமொரு விபத்து: இருவர் ஸ்தலத்தில் பலி!
திருகோணமலை- கண்டி பிரதான வீதி 98 ஆம் கட்டை சந்தியை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்து
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு சொந்தமான கெப் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் 48,50 வயது மதிக்கத்தக்கதாகவும் ஒருவர் 5ம் கட்டை பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றவர் கல்மெடியாவ வடக்கு பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.
கைது
குறித்த வீதியின் அருகே வயல்வெளி வீதி ஊடாக தனது வீட்டுக்கு செல்வதற்கு மோட்டார் சைக்கிள், திருப்ப முற்பட்ட வேலையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகன சாரதியை தம்பலகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த இரு சடலங்களும் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 23 மணி நேரம் முன்

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
