கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 5 கிலோ எடையுள்ள ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் மதிப்பு சுமார் 100 மில்லியன் ரூபாயாகும்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 33 வயதான தாய்லாந்து பெண் எனவும் அவர் இன்று அதிகாலை மலேசியாவில் இருந்து இலங்கை வந்துள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெண் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் பயணப் பொதிகளில் உணவுப் பொதிகளில் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கை சுங்கப் பிரிவினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இணைந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளைக்கும் பச்சைக்கும் இடையிலான யுத்தம் நிறைவடையுமா..! 58 நிமிடங்கள் முன்
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam