கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 5 கிலோ எடையுள்ள ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் மதிப்பு சுமார் 100 மில்லியன் ரூபாயாகும்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 33 வயதான தாய்லாந்து பெண் எனவும் அவர் இன்று அதிகாலை மலேசியாவில் இருந்து இலங்கை வந்துள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெண் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் பயணப் பொதிகளில் உணவுப் பொதிகளில் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கை சுங்கப் பிரிவினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இணைந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan
சுவிட்சர்லாந்தின் மன்னர் என அறிவித்த நபர்..117,000 சதுர மீற்றர் சாம்ராஜ்யம்..அரசியல்வாதிகள் சீற்றம் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam