நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள்

Thai Pongal Sri Lankan Tamils Jaffna Sri Lanka Tamil
By Erimalai Jan 15, 2026 06:18 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் உழவர் திருநாளாம் தை திருநாள் பொங்கல் சிறப்பு பூஜைகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளன.

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் ஆலய பிரதம குரு கணபதீஸ்வர குருக்கள் தலைமையில் பூஜைகள் இடம்பெற்றுள்ளன.

காலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று வல்லிபுர ஆழ்வார் உள் வீதி உலா வந்து பொங்கல் மற்றும் விசேட பூஜைகள் நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் | Thai Pongal Festival In Sri Lanka

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் | Thai Pongal Festival In Sri Lanka

வடமராட்சி மடத்தடி

இலங்கை தமிழரசு கட்சியின் தை பொங்கல் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் இன்று காலை 9:30 மணியளவில் வடமராட்சி மடத்தடி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொது செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான m.a.சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் | Thai Pongal Festival In Sri Lanka

மேலும் இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் கு.சுரேந்திரன, உப தவிசாளர் தயாபரன், பருத்தித்துறை பிரதேச சபை, பருதுத்துறை நகர சபை, வடராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்ச்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு 

உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று(15.01.2026) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுளளன.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.


இதனைத் தொடர்ந்து,  காலை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,  ஆலய முன்றிலில் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளதுடன், ஆலயத்தின் வண்ணக்கமார்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பொங்கல் படைக்கப்பட்டு விசேட பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் | Thai Pongal Festival In Sri Lanka

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் | Thai Pongal Festival In Sri Lanka

மன்னார்

மன்னாரில் பொங்கல் நிகழ்வுகள் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளன.

மக்கள் வீடுகளிலும் வர்த்தக நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இன்று(15.01.2026) காலை பொங்கல் பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தியுள்ளனர்.

மேலும் இந்து மற்றும் கத்தோலிக்க ஆலயங்களில் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இப்படியாக, மன்னார் மக்கள் அமைதியான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் | Thai Pongal Festival In Sri Lanka

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் | Thai Pongal Festival In Sri Lanka

திருகோணமலை

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினமான இன்று(15.01.2026) திருகோணமலையில் உள்ள தமிழ் மக்களின் வீடுகளில் விசேட பொங்கல் பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நோக்கில் விசேடமாக பூஜை வழிபாட்டுடன் பொங்கல் ஆரம்பமாகி, குடும்பங்களின் விசேட பூஜைகளுடன் நிறைவு பெற்றுள்ளன. 

இதன்படி,  திருகோணமலை- திருக்கோணேஸ்வரா ஆலயம், ஸ்ரீபத்திரகாலி அம்மாள் போன்ற ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் | Thai Pongal Festival In Sri Lanka

நல்லூர் கந்தசுவாமி ஆலயம்

தைப் பொங்கலை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

இதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் | Thai Pongal Festival In Sri Lanka

கல்முனை 

தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா முதன் முறையாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று(15.01.2026) பொலிஸ் நிலைய முன்றலில் இடம்பெற்றுள்ளது.

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் பொங்கல் பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தப்பட்டுள்ளது.  

இதன் போது, பொலிஸ் உயரதிகாரிகள் கல்முனை ரோயல் விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கந்தளாய் குளக்கோட்டுபதி சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று (15) விசேட பூஜை வழிபாடுகளும் கலை–கலாசார நிகழ்வுகளும் வெகுவிமர்சையாக நடைபெற்றன.

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் | Thai Pongal Festival In Sri Lanka

குருக்கள்மடம் 

மட்டக்களப்பு - குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இன்று(15.01.20236) நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வெகு விமர்சையாக இடம்பெற்றுள்ளன.


ஆலயத்தில் கிருஷ்ண பெருமானுக்கு அதிகாலை விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து, விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

ஆலயப்பிரதம குரு சிவ ஸ்ரீ சோமேஸ்வரம் குருக்கள் தலைமையில் பூஜை வழிபாடுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் | Thai Pongal Festival In Sri Lanka

நுவரெலியா 

நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் தைபொங்கல் தினத்தினை முன்னிட்டு இன்று(15) அதிகாலை இயற்கையின் முழுமுதற் கடவுளான சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக புதுப்பானையில் மஞ்சள் கருப்பு மாவிலை கட்டி விபூதி சந்தனம் குங்குமம் சாத்தி,சக்கரை பொங்கல் பொங்கி சூரியக்கு படைத்து பூஜைகள் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

விநாயகர் வழிபாடு அலங்கார பூஜை,புஸ்பாஞ்சலி ஆகிய இடம்பெற்று சூரியனுக்கு சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.

சிறப்பு பூஜை வழிபாடுகளை ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சற்குண சன்மதுர குருக்கள் தலைமையில் நடைபெற்றன. இந்த பூஜை வழிபாடுகளில் ஹட்டன் பகுதியை சேர்ந்த பக்த அடியார்கள் கலந்து கொண்டு பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். 

திருகோணமலை - மல்லிகைத்தீவு

திருகோணமலை - மல்லிகைத்தீவு அருள்மிகு ஸ்ரீ மங்கேஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் பூசை வழிபாடுகள் இன்று வியாழக்கிழமை (15) காலை மிகவும் பக்திபூர்வமாகவும் மிகச்சிறப்பாகவும் நடைபெற்றது.

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் | Thai Pongal Festival In Sri Lanka

தைத்திருநாளை முன்னிட்டு ஆலய வளாகத்தில் பொங்கல் பொங்கப்பட்டு, சூரிய பகவானுக்கும் ஸ்ரீ மங்கேஸ்வரருக்கும் விசேட தைப்பொங்கல் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதேவேளை, மல்லிகைத்தீவு மாத்திரமன்றி திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஏனைய சகல இந்து ஆலயங்களிலும் தைப்பொங்கல் விசேட பூசை வழிபாடுகள் மிகச் சிறப்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மட்டக்களப்பு- செட்டிபாளையம்

மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இன்று (15.01.2026) பக்தி பூர்வமாக நடைபெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிசேக பூஜைகளை தொடர்ந்து, விநாயகப் பெருமானுக்கு பக்தி பூர்வமாக பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

ஆலயப்பிரதமகுரு திருவேரகசர்மா குருக்களினால் இப்பூஜை வழிபாடுகள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பூஜையின் நிறைவில் பக்தர்களுக்கு கைவிசேஷமும் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் | Thai Pongal Festival In Sri Lanka

தமிழரசுக்கட்சி

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு இன்றைய தினம்(15.01.2026) நடைபெற்றது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிவஞானம் சிறீதரன்,  தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் இன்றைய தினம் சிறப்பாக எல்லோராலும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

[

அனைவருக்கும் சிறப்பாக அமைகின்ற ஆண்டாக அமைய வேண்டும். அவர்களுடைய தேசிய அரசியல் அவிலாசைகள் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் எங்கள் தமிழர்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும்.

ஏனைய இனங்களையும் மதித்து ஒரு சுயாட்சி கொண்ட ஜனநாயகப் பண்புகளையும் மதித்து அந்தஜனநாயகப் பண்புகளையும் மதித்து ஜனநாயக விழுமியங்களோடு எங்கள் மண்ணிலே எங்களுக்கான வாழ்வை அமைத்துக் கொள்வது இந்த ஆண்டு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

GalleryGallery
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US