இந்தியாவிற்கு கடும் அழுத்தம் கொடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

India Narendra Modi Transnational Government of Tamil Eelam Milinda Moragoda
By Murali Sep 10, 2021 01:03 AM GMT
Report

இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவராக மிலிந்த மொரகொடாவின் நியமனத்தை ஏற்க வேண்டாம் என இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மிலிந்த மொரகொடாவின் ( credentials ) தகுதிச்சான்றை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அமைச்சுத் தகுதிநிலையுடன் தூதுவராக மொரகொடா நியமனம் செயப்பட்டிருப்பதனை சுட்டிக்காட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இவ்வாறு அமைச்சர் தகுநிலை வழங்குவதானது தூதுவர்களை நியமிக்கும் மரபில் இல்லை என்றும், இது பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புவதாக உள்ளதெனவும் சுட்டிக்காட்டியது.

இலங்கைத்தீவின் இறுதிப்போரின் முடிவுக்கு பின்னராக 2009 மே – 2020 ஏப்ரல் காலப்பகுதியில் சிறிலங்காவின் நீதி மற்றும் சட்டச் சீர்திருத்த அமைச்சராக மொரகொடா இருந்தவர் என்பதோடு, அக்காலத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம் ( Internally Displaced People (IDP) camps ) என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மனிதத் தன்மையற்ற முறையில் தள்ளப்பட்டிருந்தனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிகாட்டியுள்ளது.

குறிப்பாக புனர்வாழ்வு முகாம்களில் 'புனர்வாழ்வு' என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், ஆதரவாளர்களாகக் கருதப்பட்டவர்களுமாக ஆயிரக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாஙகம், 1960களில் சீனக் கலாசாரப் புரட்சிக் காலத்தில் அங்கு அமைக்கபட்ட 'புனர்கல்வி மையங்களைப் போன்றவையாக' இவைகள் அமைந்திருந்தன எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் கடும் சித்திரவதைகளுக்கும், ஏற்றுக் கொள்ளமுடியா பெருங் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்கள் என நம்பகமான சான்றுகளின் அடிப்படையில் சர்வதேச மனித உரிமையாளரும், ஐ.நாவின் வளஅறிஞராக முன்னராக இருந்தவருமாகிய ஜஸ்மின் சுக்கா அவர்களது International Truth and Justice Project அமைப்பு தெரிவித்திருந்ததனையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்காவின் தற்போதைய சிறையமைப்பிலும் மொரகொடாவுக்குப் பாரிய பங்கு இருக்கின்றது எனத் தெரிவித்தள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்தச் சிறையமைப்பில்தான் தமிழ் அரசியல் கைதிகள், தமிழ்ப் போர்க்கைதிகள் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கும் வலிந்து காணாமலாக்கும் கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா சட்டமா அதிபர் திணைக்களமும் நீதித்துறை அமைச்சர் என்ற முறையில் மொரகொடாவின் மேற்பார்வைக்கு உட்பட்டதே என்றும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்( PTA ) கீழ் நடந்த துன்புறுத்தல்கள், சிறைக்காவல், சித்திரவதை யாவற்றுக்கும் இவரே பொறுப்பாகிறார் என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்காவின் பயங்கரகவாத தடுப்புச்சட்டம் (PTA) மேன்மைகொண்ட சட்டநெறிகளில் படிந்த கறை என பன்னாட்டுச் சட்டவாளர் ஆணையம் (ஜசியே) கூறியுள்ளதனையும் சுட்டிக்காட்டியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மட்டுமல்லாமல் மனிதவுரிமைப் பேரவை, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியனவும் இச்சட்டத்தை சிறிலங்கா நீக்கம் செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தனர் என்பதனையும் தெரிவித்துள்ளது.

மொராகொடாவினால் நிறுவப்பட்டுள்ள Pathfinder Foundation எனும் அமைப்பு, அமைதிக்காகவும் மதங்களிடையே நல்லெண்ணத்துக்காகவும் பாடுபடுவதாகக் கூறிக் கொள்கிற போதும், சீனாவுடனான அதன் நெருக்கத்தை அந்நிறுவனம் வெளிப்படுத்தவதாக அமைந்துள்ளது என இந்தியாவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவின் ஆசிர்வாதத்துடன் மொரோகொடாவின் பங்களிப்புடன் சிறிலங்காவில் ஆட்சியில் அமர்ந்துள்ள தற்போதைய அரசாங்கத்துக்கு அமைதியையோ மதங்களிடையே நல்லிணக்கத்தையே ஊக்கிவிப்பதில் நம்பிக்கை கிடையாது எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத் தீவுகளில் இந்தியாவுக்கு வழங்குவதாக இருந்த காற்றலை மின்திட்டத்தில் இருந்து இந்தியாவை நீக்கம் செய்து அதனை சீனாவுக்கு வழங்கியிருந்ததோடு, வட பகுதியில் இந்தியா மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்களை சீர்குலைந்து வருவது தொடர்பில் ஈழத்தமிழ் மக்கள் கவலை கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்தியாவை தொடர்ந்து சிறிலங்கா உதாசீனம் செய்து சீற்றங் கொள்ள வைப்பது தொடர்பிலும் கவலை கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

சீனாவுடன் நெருக்கமான உறவினைக் கொண்டுள்ள மொரகொடா தூதுவராக நியமனம் செய்திருப்பதானது, ஈழத் தமிழர்களின் அக்கறை கொண்டுள்ள இந்தியாவுக்கு தடைக்கல்லாக அமைவது மட்டுமல்லாது இலங்கைத் தீவில் இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவும் அமைந்து விடும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரித்துள்ளது.

கீழ் வரும் சம்பவங்களையும் முன்னுதாரணங்களாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

2020ம் ஆண்டு கனடாவுக்கு தனது தூதராக சிறிலங்கா நியமனம் செய்திருந்த ஏர்மர்செல் விமானப்படை தளபதி சுமங்கல டயசை 'கனடா' நிராகரித்தது. 2010ம் ஆண்டு ஈரான் நியமித்த தூதரை கனடா மறுதலித்தமையும் பாகிஸ்தான் அமர்த்திய தூதரை சவுதி அரோபியா மறுதலித்தமையும் இவ்வாறான முன்னுதாரணங்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது.

தற்போது கனடாவினால் நிராகரிக்கப்பட்ட ஏர்மர்செல் விமானப்படை தளபதி சுமங்கல டயசை, இத்தாலிக்கான தனது தூதராக சிறிலங்கா நியமித்துள்ள நிலையில், இத்தாலி அதனை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை என சொல்லப்படுகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம்

23 Oct, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வற்றாப்பளை, Ajax, Canada

18 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, சுதுமலை, Pickering, Canada

23 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், மீசாலை

13 Nov, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
மரண அறிவித்தல்

கொக்குவில், Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Markham, Canada

23 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நந்தாவில், கொக்குவில், Montreal, Canada

23 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

22 Oct, 2009
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

20 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு

01 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், முல்லைத்தீவு, வவுனியா

21 Oct, 2015
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Trichy, British Indian Ocean Terr., கம்பளை

27 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US