அமெரிக்காவில் பணய கைதிகளை தடுத்து வைத்தவர் இங்கிலாந்து நாட்டவர்! மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க டெக்சாஸில் உள்ள ஜெப ஆலயத்தில் கடந்த சனிக்கிழமையன்று பணயக்கைதிகளாக நால்வர் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணயக்கைதிகளை தடுத்து வைத்த சம்பவத்தின்போது இங்கிலாந்தின் குடிமகனான 44 வயதான மாலிக் பைசல் அக்ரம், காவல்துறையினருடன் இடம்பெற்ற மோதலின்போது கொல்லப்பட்டார்.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தெற்கு இங்கிலாந்தின் மென்செஸ்டரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
எனினும் அவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. அமெரிக்க காவல்துறை தகவல்களின்படி, அக்ரம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நியூயார்க்கின் ஜேஎஃப்கே சர்வதேச விமான நிலையம் வழியாகவே அமெரிக்காவை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அக்ரமின் சகோதரர் குல்பர் பிளாக்பர்ன் முஸ்லிம் சமூகத்தின் முகநூல் பக்கத்தில் ஒரு அறிக்கையில், தமது சகோதரரின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.
அவர் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டதுடன், தனது சகோதரர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதேவேளை அக்ரமினால் பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரும் காயமின்றி சில மணித்தியாலங்களில் விடுவிக்கப்பட்டனர்.





இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 12 மணி நேரம் முன்

வெளிநாடு ஒன்றில் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை! ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாக தகவல் News Lankasri

சொந்த ஊரில் இருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் Cineulagam

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri

விஜய், அஜித், விக்ரம் என முவரும் நிராகரித்த திரைப்படம் ! சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன கதை.. Cineulagam

நடிகர் அஜித்தின் இந்த இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. பலரும் பார்த்திராத ஒன்று Cineulagam
