அமெரிக்காவில் பதிவாகியுள்ள கொடூர சம்பவம்: துரிதமாக செயல்பட வேண்டிய நேரம் இது என்கிறார் ஜோ பைடன்
ஆயுதக் கட்டுப்பாடு குறித்து எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரை அமெரிக்காவில் எடுக்கப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் இளைஞர் ஒருவர் நேற்று நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஜப்பானிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று அமெரிக்கா திரும்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த அசம்பாவிதம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றுகையில்,
டெக்சாஸ் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மிகவும் கொடூரமான ஒன்று. இதுபோன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மற்ற உலக நாடுகளில் மிகவும் அரிதாக நடைபெறுகின்றன
ஆனால், அமெரிக்காவில் இது அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. இதற்கு என்ன காரணம்? ஆயுதக் கட்டுப்பாடு குறித்து நாம் வெறுமென பேசிதான் வருகிறோம்.

எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரை அமெரிக்காவில் எடுக்கப்படவில்லை. துப்பாக்கி கலாச்சாரத்துக்கு என்று நாம் முற்றுப்புள்ளி வைக்க போகிறோம்?
எத்தனை காலத்திற்குதான் இந்த அவலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க போகிறோம்? நான் மிகுந்த விரக்தியில் இருக்கிறேன். நாம் துரிதமாக செயல்பட வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ளார்.
| அமெரிக்காவில் பாலர் பாடசாலையில் துப்பாக்கி சூடு - பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு |
நடிகர் பார்த்திபனுக்கு த்ரிஷா காட்டமான பதிலடி! மைக்கை பிடித்து அறிவில்லாத அநாகரீக பேச்சு.. Cineulagam
தனிமையில் கொடுமையை அனுபவித்த விஜயா.. மனம் மாறி மீனாவை வீட்டிற்கு அழைப்பாரா? சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
த்ரிஷாவை தாக்கிய நடிகர் பார்த்திபன்.. "குந்தவை வீட்டுக்குள்ளே குந்த வைக்கப்பட்டால் நல்லது" Cineulagam
இராணுவத் தளங்களை மூடுக... வெளிநாட்டில் பிரித்தானியாவிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம் News Lankasri
எதை குறித்தும் கவலைப்படாத திரிஷா.... இன்ஸ்டாகிராமில் இப்போ என்ன சொல்லியிருக்கிறார்னு தெரியுமா? Manithan
ஈரானுக்குள் புகுந்து யுரேனியம் கையிருப்பை கைப்பற்ற திட்டம்: அதிரடிப்படையை களமிறக்கும் அமெரிக்கா News Lankasri