மேல் மாகாண மக்களுக்கான அறிவித்தல்! பொலிஸாரின் நடவடிக்கை தொடரும்
மேல் மாகாணத்தில் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பதனை கண்காணிக்கும் பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படிப்படியாக பொதுமக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதை மக்கள் மறந்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன் விளைவாக, இந்த நாட்களில் கோவிட் நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், பல வைத்தியசாலைகள் நோயாளர்களால் நிரம்பி வழிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளை நினைவூட்டும் வகையில் பொலிஸார் மேல் மாகாணத்தில் பரிசோதனைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.