சிறுமி ஹிசாலினி விவகாரம்! பல நாட்களின் பின்னர் சிக்கியுள்ள முக்கிய ஆதாரங்கள்
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயரிழந்த சிறுமி ஹிசாலினியின் மரணம் தொடர்பில் தற்போது சில சாட்சியங்கள் கிடைத்துள்ளன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரான பேராசிரியர் முதித்த விதான பத்திரண உள்ளிட்ட அதிகாரிகள், இன்று முதன்முறையாக, ரிசாட் பதியுதீனின் வீட்டுக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள், நாளைய தினம் நீதிமன்றில் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் மண்ணெண்ணெய் போத்தல் ஒன்றும், லைட்டர் ஒன்றும், எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஒரு சோடி பாதணி என்பன தொடர்பில், காவல்துறை விசாரணையில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளாகி, சுமார் 20 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை! பகிரப்பட்டுள்ள வட்ஸ்அப் ஆதாரங்கள்
போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்
வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் Cineulagam
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri