பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கருத்து!
கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் ஒரு பகுதி மக்களே பாதிக்கப்பட்டனர் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (31.03.2023) பூநகரி பிரதேச செயலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய சட்டமானது நாடு தழுவிய ரீதியில் நாட்டு மக்களுக்கான ஒரு சட்டமாகத்தான் கொண்டுவரப்படுகிறது. இதில் மதவாதமோ அல்லது இனவாதமோ இருக்காது.
நாடாளுமன்றத்தின் அங்கீகாரம்
ஆனால், இதுவும் இன்னமும் ஒரு முடிவாக எடுக்கப்படவில்லை. இது நாடாளுமன்றத்துக்குக்
கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் தான் சட்டமாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.