யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல தரப்புகளுன் கலந்துரையாடல்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.
அந்தவகையில் இன்றையதினம் (30.03.2023) யாழ். காக்கைதீவு பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.
இதன்போது சாவற்காடு பிரதேச கடற்றொழிலாளர்களுக்கான இறங்கு துறை அமைத்தல் தொடர்பான விடயங்களை கலந்துரையாடியுள்ளார்.
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
மேலும் பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய கோரிக்கை
தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடனும் அவர் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.