மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம்: விசேட அதிரடிப்படையினர் அழைப்பு
மாத்தறை (Matara) சிறைச்சாலை அதிகாரிகளால் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது இன்று (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்ற அதிகாரிகள் முயன்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
இந்தநிலையில், ஒரு கூண்டில் இருந்து வெளியே வந்த கைதிகள் குழு ஒன்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதற்றமாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சிறைச்சாலையின் வெளியில் பாதுகாப்பிற்கு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |