நாட்டில் பத்து லட்சம் பேர் ஆபத்தில்
நாட்டில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தரப்பினர்களில் சுமார் 10 இலட்சம் பேர் இதுவரை பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் நாட்டில் அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்கள் மற்றும் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தாலும், கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 6 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோரே, மருத்துவ சிக்கல்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் கோவிட் 19 சம்பந்தமான பிரதான இணைப்பாளர், சுகாதார சேவைகள் தொழில்நுட்பட பிரிவின் பணிப்பாளருமான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோவிட் தொற்றால் மரணித்தவர்களில் நான்கில் 3 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் சுமார் 10 இலட்சம் பேர் இதுவரை பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாமல் ஆபத்தில் இருப்பதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam