ஓய்வுபெற்ற புகையிரத ஓட்டுனர்களை தற்காலிக சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்
ஓய்வுபெற்ற புகையிரத ஓட்டுனர்களை தற்காலிக சேவைக்கு மீண்டும் இணைத்துக்கொள்ள புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்றைய தினம் ஏராளமான புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் புகையிரத திணைக்கள நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் சேவையில்
இந்நிலையில் இன்று மாலை அலுவலக போக்குவரத்து புகையிரதங்களை இயக்குவதற்கு ஓய்வுபெற்ற புகையிரத ஓட்டுனர்களை தற்காலிக அடிப்படையில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கான உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொதுமுகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.