முல்லைத்தீவில் அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் அல்லல்படும் மக்கள் (Photos)
முல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் கிடைத்தும் மீதிப்பணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டில் வாழும் மக்கள் தற்போது பருவமழையினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மக்கள் எதிர்நோக்குகின்ற சிரமங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் சுமார் 1600 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கிவைக்கப்பட்ட போதும் அது வெறும் அத்திவாரத்துடன் நிறுத்தப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து அந்த மக்களுக்கான மீதிப்பணம் கிடைக்காத நிலையில் தற்போதும் மக்கள் தற்காலிக கொட்டில்களில் மழைவெள்ளத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்.
சஜித்தின் வீட்டுத்திட்டம் என மக்களால் சொல்லப்பட்டுவரும் இந்த வீட்டுத்திட்டத்திற்கான பணம் இதுவரை கிடைக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். பல வீடுகள் அத்திவாரம் இடப்பட்ட நிலையிலும் இன்னும் பல வீடுகள் அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றன.
இது தொடர்பில் குறித்த மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தினால் இதுவரையில் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
