தமிழர் பகுதியில் ஆலயங்கள் உடைக்கப்பட்டு திருட்டு (Photos)
தமிழர் பகுதியில் அண்மை காலமாக ஆயலங்கள் உடைக்கப்பட்டு பல திருட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றது.
கிளிநொச்சி
கிளிநொச்சி- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் மற்றும் புலோப்பளை பகுதிகளில் உள்ள இருவேறு ஆலயங்களில் திருடர்கள் தமது கைவரிசையினை காட்டியுள்ளனர்.
பளை தம்பகாம நெலியாய் ஆலயம் மற்றும் புலோப்பளை வைரவர் ஆலயம் என்பவனவற்றில் நேற்று (06) திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புலோப்பளை பகுதியில் அமைந்துள்ள வைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு அங்கு இருக்கின்ற விக்கிரகங்களின் ஐம் பொன் தகடுகள் விக்கிரகங்கள் களவாடப்பட்டுள்ளன.
அத்துடன், தம்பகாமம் பகுதியில உள்ள நெல்லியாய் அம்மன் ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்தும் பெருமளவான பொருட்கள் களவாடப்பட்டிருக்கின்றன இவ்வாறு குறித்த இரு ஆலயங்களும் நேற்றிரவு உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன.
சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம்
யாழ். காரைநகர் பயிரிக்கூடல் முருகன் ஆலய நந்தி பலிபீடம் அடையாந்தெரியாத விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (05.12.2022) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊர்காவற்துறை பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.