கனேடிய நகரமொன்றில் அதிகரித்துள்ள வெப்பநிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின்(Canada) முக்கிய நகரங்களில் ஒன்றான டொரன்டோவில்(Toronto) வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் கனேடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் டொரன்டோவின் வெப்பநிலை 29 பாகை செல்சியஸ் அளவில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரப்பதனின் அளவு
காற்றின் ஈரப்பதனின் அளவு அடிப்படையில் இந்த வெப்பநிலையானது சுமார் 37 பாகை செல்சியஸ் அளவாக உணர நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்றாரியோ மாகாணத்தின் அநேகமான பகுதிகளில் வெப்பநிலை நீடிக்கும் என கனேடிய தேசிய வளிமண்டலவியல் முகவர் நிறுவனம் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி காற்றின் தரம் குறைவடையும் எனவும் அறிவுறுத்தியுள்ளதோடு, நாளையும் 29 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நீடிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri