பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட குழப்பம்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் (UK Parliament) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்நுழைவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பாதுகாப்புக்காக நாடாளுமன்றத்துக்குள் நுழையும் இடங்களில் தானியங்கி பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த தானியங்கி அமைப்பில் இன்று (29.08.2024) காலை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்நுழைவதில் பிரச்சினை ஏற்பட, அங்கு குழப்பம் உருவாகியுள்ளது.

ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடைய அலுவலர்கள் ஆகியோர் இலத்திரனியல் கடவுச்சீட்டின் உதவியுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைவார்கள்.
குறித்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நாட்டில் இல்லாத நேரம்
எனினும், இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) ஜேர்மனி மற்றும் பிரான்சுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri