அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்
நாடாளவிய ரீதியில் நாளை முதல் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைக்கு அரசாங்கத்திடம் இருந்து நியாயமான பதில் கிடைக்கவில்லை என சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆசிரியர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளையதினம் பணிக்கு வருவதாகவும், பாடசாலைகள் முடிவடைந்ததும் 1.30 மணிக்குப் பிறகு உரிய போராட்டங்களில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.