எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் போராட்ட ஊர்வலம் (Photos)
எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் போராட்ட ஊர்வலம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி கல்விச் சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டியும் சம்பந்தப்பட்டவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் கோரி கல்வி பொது சாதாரண பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு கடமைக்காக வந்திருந்த ஆசிரியர்கள் இவ்வாறு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் இப்போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை வெளிப்படுத்தி தமது எதிர்ப்பினை வெளியீட்டு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
எரிபொருள் இல்லாமல் கடமையைத் தொடர முடியாது
மேலும் வரிசையில் நிற்போரே உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைச் சிந்தியுங்கள், எரிபொருள் இல்லாமல் கடமையைத் தொடர முடியாது, கொழும்பு பாடசாலைக்கு மட்டுமா எரிபொருள் பிரச்சினை போன்ற வாசகங்களை எழுதி கோஷங்களைப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
அத்துடன் இந்த போராட்டமானது கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை முன்பாக ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை வந்தடைந்து நிறைவடைந்தது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தின் முன்பாகவும் சிறிது நேரம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததுடன், இறுதியாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ. எல் ஏ. வாஹிட் நெறிப்படுத்தலில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா தலைமையிலான ஆசிரியர் குழு கலந்துரையாடல் மேற்கொண்ட பின்னர் சுமூக தீர்வு ஒன்றும் எட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

இந்திய வம்சாவளி சிறுவனுக்கு லண்டனில் நண்பர்கள் அளித்த இறுதி மரியாதை: நெஞ்சை உலுக்கும் புகைப்படம் News Lankasri

நாளை முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்? செவ்வாய் பெயர்ச்சியால் காத்திருக்கும் ஆபத்து Manithan

அதிவேக சொகுசு காரில் நடிகர் அஜித்... ஒரு காரின் விலை மட்டும் இத்தனை கோடியா? ஷாக்கில் ரசிகர்கள் Manithan

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022