சர்வதேச ஆசிரியர் தினம் கருப்பு ஆசிரியர் தினமாக கல்முனையில் பிரகடனம்
சர்வதேச ஆசிரியர் தினமான இன்று கருப்பு ஆசிரியர் தினமாகப் பிரகடனம் செய்து நாட்டின் 312 கல்வி வலயங்களை மையப்படுத்தி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று முன்னெடுத்துள்ளது.
இரண்டு பிரதான விடயங்களை முன்னிலைப்படுத்தியே , இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டுப் பிரச்சினை மற்றும் நாட்டிலுள்ள மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாத்தல் ஆகிய இரண்டு விடயங்களை முன்னிலைப்படுத்தியே கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் அலுவலக முன்றலில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகச் சுலோகங்களை ஏந்தி போராடிய இஸ்லாமிய ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த இரு வருடங்களாகச் சிறப்பாக இணையத்தில் கற்பித்து நல்ல பெறுபேற்றை பெற்றுக்கொண்டுள்ளோம். போராட்டம் 86 நாட்கள் கடந்தும் தமது பிரச்சினைக்கு இதுவரை அரசாங்கம் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை எனவும், பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டுமாயின் அரசாங்கம் ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தித் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், அதிபர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
