புடவையில் இருந்து வேறு ஆடைக்கு மாறிய ஆசிரியர்கள்: பகிரப்படும் புகைப்படங்கள்
இலங்கையில் உள்ள பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் புடவைக்கு பதிலாக வேறு வசதியான ஆடைகளை அணிந்து இன்று (21.11.2022) பாடசாலைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக புடவை அணிவதற்கு அதிக செலவாகுவதாகவும் அதற்கு பதிலாக வேறு உடைகள் அணிவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியைகளுக்கு பொருத்தமான வசதியான ஆடைகளை அணிவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தார்.

பொது நிர்வாகம் தொடர்பான சுற்றறிக்கை
இந்நிலையில், எந்தவொரு ஆசிரியர் சங்கத்தினதும் அழுத்தத்தினால் ஆசிரியர்கள் குறித்த தீர்மானத்தை எடுக்கப்படவில்லை என ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பொது நிர்வாகம் தொடர்பான 5/2022 சுற்றறிக்கையின் பிரகாரம் ஆசிரியர்களின் ஆடை உரிமைக்கு அமைவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் உடையான புடவையை மாற்றுவது தொடர்பில் தாம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கபோவதில்லையென கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அண்மையில் நாடாளுமன்ற தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam