புடவையில் இருந்து வேறு ஆடைக்கு மாறிய ஆசிரியர்கள்: பகிரப்படும் புகைப்படங்கள்
இலங்கையில் உள்ள பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் புடவைக்கு பதிலாக வேறு வசதியான ஆடைகளை அணிந்து இன்று (21.11.2022) பாடசாலைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக புடவை அணிவதற்கு அதிக செலவாகுவதாகவும் அதற்கு பதிலாக வேறு உடைகள் அணிவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியைகளுக்கு பொருத்தமான வசதியான ஆடைகளை அணிவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தார்.

பொது நிர்வாகம் தொடர்பான சுற்றறிக்கை
இந்நிலையில், எந்தவொரு ஆசிரியர் சங்கத்தினதும் அழுத்தத்தினால் ஆசிரியர்கள் குறித்த தீர்மானத்தை எடுக்கப்படவில்லை என ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பொது நிர்வாகம் தொடர்பான 5/2022 சுற்றறிக்கையின் பிரகாரம் ஆசிரியர்களின் ஆடை உரிமைக்கு அமைவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் உடையான புடவையை மாற்றுவது தொடர்பில் தாம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கபோவதில்லையென கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அண்மையில் நாடாளுமன்ற தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri