சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை - விசாரணையில் வெளியான பல தகவல்கள்
தென்னிலங்கையில் ஆத்திரத்தில் தனது வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படும் ஆசிரியையின் சடலம், ஒரு நாள் கழித்து களுத்துறை தெற்கு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் பண்டாரகம, வீதியகொடவை சேர்ந்த ஆசிரியையாக பணி புரியும் 42 வயதான நதீஷானி தரங்கிக அமரநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஒரு பிள்ளையின் தாயான அவரது கணவரும் ஒரு பாடசாலை நடன ஆசிரியராக பணி புரிகிறார் எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த ஆசிரியை
கடந்த 29ஆம் திகதியன்று, உயிரிழந்த ஆசிரியை தான் முன்பு கற்பித்த ஒரு பாடசாலையில் தனது தோழிக்காக திருமண நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த விழாவில் அவர் கலந்து கொண்டபோதிலும், அவரது பணி காரணமாக அவரது கணவரால் கலந்துகொள்ள முடியவில்லை.
இதன் காரணமாக இருவருக்கும் இடையே சில மனக்கசப்புகள் ஏற்பட்டதாகவும், இதற்கிடையில், 30ஆம் திகதியன்று, உயிரிழந்த ஆசிரியையின் கணவர், அவரது பாடசாலை சம்பந்தமாக கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் எனவும் தெரியவந்தது.
அந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என உயிரிழந்த ஆசிரியை பலமுறை அவரிடம் கூறியிருந்தார்.
அன்று தன் கணவருக்குப் பலமுறை தொலைபேசியில் பேசியிருந்த அந்த ஆசிரியை, வீட்டை விட்டு கோபமாக வெளியேறியுள்ளார்.
பெண்ணின் சடலம்
அவரைக் கண்ட அவரது மகனும் தாயும், போக வேண்டாம் என கூறி அவரைப் பின்தொடர்ந்தனர். ஆனால், தன் தாய் சென்ற வேகத்தில் பாட்டியுடன் அவரால் செல்ல முடியவில்லை.

மேலும், தாய் முச்சக்கர வண்டியில் சென்றுவிட்டதாக மகன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த கணவர், தன் மனைவியின் தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகள் மூலம், அவர் வீட்டை விட்டு வெளியேறி, சிறிது தூரம் நடந்து சென்று ஒரு முச்சக்கர வண்டியில் ஏறிச் சென்றுவிட்டதை அறிந்து கொண்டார்.
அவர் அன்று நள்ளிரவு சுமார் 12.40 மணியளவில் மொரகஹேன முறைப்பாடு செய்தார்.
இந்த நிலையில் முதலாம் திகதி களுத்துறை தெற்குக் கடற்கரையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
கணவரும் தாயாரும் அழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிந்தவர் காணாமல் போன பெண் என உறுதி செய்யப்பட்டுள்ளது.