ரணில் அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த செஹான் திசாநாயக்க

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government
By Kumar Sep 14, 2022 08:21 AM GMT
Report

ரணிலின் அரசாங்கம் விரைவாக அனைத்து அரச ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் செஹான் திசாநாயக்க சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று(13.09.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்படாத வகையில் கல்வியை தொடர்வதற்கு உரிய சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பொருளாதார சிக்கல் நிலைமை காரணமாக மாணவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் எதிர்நோக்கும் இடர்பாடுகள்

ரணில் அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த செஹான் திசாநாயக்க | Teachers Association Regarding Salary Increase

தற்பொழுது இலங்கையிலே மூன்றில் ஒரு மாணவர் மந்த போசாக்கினால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

இது இவ்வாறு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் தான் இலங்கையில் உயர்கின்ற விலைவாசி காரணமாகவும் உயர்கின்ற வரிகள் காரணமாகவும் மாணவர்கள் தங்களுடைய கல்வி உபகரணங்களினை பெற்றுக்கொள்வதில் பாரிய இடர்பாடுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக பயிற்சி புத்தகங்களை வாங்க முடியாத ஒரு சூழலுக்கு பல மாணவர்கள் தள்ளப்பட்டு இருக்கின்றார்கள். எனவே இந்த மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்படாத வகையில் கல்வியை தொடர்வதற்கு உரிய சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் தான் கடதாசிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற வரிகளை அகற்றி, விலையினை குறைத்து, மாணவர்கள் பயிற்சி புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்குரிய ஏற்பாடுகளை இந்த அரசாங்கம் செய்து கொடுக்க முன்வர வேண்டும்.

பொருளாதார நெருக்கடி

ரணில் அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த செஹான் திசாநாயக்க | Teachers Association Regarding Salary Increase

இதேவேளை இன்றைய காலகட்டத்தில் பொதுவாக அனைத்து அரசு ஊழியர்களும் தங்களுடைய வாழ்க்கை தரத்தினை கொண்டு நடத்த முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

மேலும் இந்த பொருளாதார சிக்கல் நிலை காரணமாக அவர்களுடைய அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

எனினும் அரசாங்கம் இவர்களுக்கு எந்த ஒரு சலுகைகளையும் பெற்றுக் கொடுக்காது. விலைவாசிகளை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

ஆனால் அரசாங்கம் கூறுகின்றது, அரசு ஊழியர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்று இந்த அரச ஊழியர்களை அதிகமாக இணைத்துக் கொண்டது யார், அரசாங்கமே அரசு ஊழியர்களை அதிகமாக இணைத்து கொண்டார்கள்.

இவ்வாறு இணைத்ததன் பின்னர் அதிகமாக இருக்கின்றார்கள் என்று கூறிக் கொண்டிருப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை.

அரசு ஊழியர்களை கைது செய்கின்ற  நடவடிக்கை

ரணில் அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த செஹான் திசாநாயக்க | Teachers Association Regarding Salary Increase

அடுத்து வருகின்ற வரவு செலவு திட்டத்திலாவது அரச ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்குகின்ற அடிப்படையில் 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தினை உடனடியாக அதிகரித்து வழங்க வேண்டும். இவ்வாறு வழங்காத பொழுது எங்களுக்கு வீதியில் இறங்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகும்.

எனவே இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கின்றோம், விரைவாக அனைத்து அரச ஊழியர்களுக்கும் சலுகைகளை  வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்பதனை கூறிக் கொள்கின்றோம்.

மேலும் இன்றைய காலகட்டத்தில் உரிமைகளுக்காகவும் நாட்டில் ஏற்படுகின்ற அராஜகங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கின்ற மக்களினை அடக்கி ஒடுக்கி அவர்களை கைது செய்கின்ற ஒரு நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு, மனித உரிமைகளை அடக்க முற்படுகின்றனர்.

எனவே இவ்வாறான செயற்பாடுகளை கைவிட்டு மனித உரிமையினை நிலை நாட்ட அரசாங்கம் முன் வரவேண்டும் என்கின்ற கோரிக்கையும் முன்வைக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US