இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Jaffna Sri Lanka Education
By Theepan Jun 01, 2025 09:21 AM GMT
Report

ஆசிரியர் இடமாற்ற கொள்கையில் முறைகேடுகள் திருத்தப்படாவிடின் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த போராட்டமானது எதிர்வரும் புதன்கிழமை (4ஆம் திகதி) காலை பத்து மணியளவில் ஆளுநர் அலுவலகம் முன்பாக நடைபெறவுள்ளது.

இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடல் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றது.

இலங்கை மக்களுக்கு அநுர கொடுக்கப் போகும் 10 ஆயிரம் ரூபா..! வெளியான உண்மை நிலவரம்

இலங்கை மக்களுக்கு அநுர கொடுக்கப் போகும் 10 ஆயிரம் ரூபா..! வெளியான உண்மை நிலவரம்

தொழிற்சங்க தீர்மானம்

இதன்பொழுது இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் கல்வி திணைக்களத்தின் இடமாற்ற கொள்கையால் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

வெளி மாவட்டத்தில் ஆசிரியர்கள் பணியாற்றுவதனை தடுப்பது சங்கத்தின் நோக்கமல்ல எனவும், ஆசிரியர்கள் ஏமாற்றபடாது வெளிமாவட்டங்களில் அவர்கள் ஆற்றவேண்டிய காலத்தை வரையறுக்குமாறும் குறித்த கூட்டத்தில் தொழிற்சங்க தீர்மானம் தொடர்பில் பிரஸ்தாபிக்கபட்டது.

இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை | Teacher Transfer Policy

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் தமது கருத்தினை பின்வருமாறு பதிவு செய்தனர்.

பாக்கியலட்சுமி ராஜன் வடமராட்சி வட இந்து மகளீர் கல்லூரி ஆசிரியரின் கருத்து, தற்பொழுது ஆசிரியைகளாக கடமை புரிகின்ற நாம் கடந்த 2004ஆம் ஆண்டு பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி இருந்த காலப் பகுதியில் மத்திய மாகாணத்தில் ஆசிரியர் பணிக்கு அமர்த்தப்பட்டோம்.

10 வருடங்கள் மத்திய மாகாணத்திலே ஆசிரிய சேவையை நிறைவு செய்துவிட்டு வட மாகாணத்திலே நான் பிறந்த யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வடமராட்சி மண்ணிலே சேவையாற்ற வேண்டும் என நான் அந்த இடமாற்றத்தை பெற்று வந்தேன்.

வட மாகாணத்தில் அழகியல் துறை பாடங்களுக்கு அகலமான ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் என கூறியும் மிகவும் கடினப்பட்டு இந்த இடமாற்றத்தினை பெற்று இங்கு வருகிறது 11 வருடங்கள் கடமையாற்றினேன்.

தற்பொழுது சேவை கருதி இடமாற்றம் என்ற போர்வையில் பௌனியா தெற்கு கல்வி நிலையத்திற்கு 48 வயதில் என்னை இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறு மாகாண கல்வி பணிப்பாளர் கூறுகின்றார்.

கடந்த பத்து வருடங்கள் மத்திய மாகாணத்தில் சேவையாற்றிய நான் மீண்டும் தூர தேசம் செல்ல வேண்டும் என்பதனை நினைக்கின்ற பொழுது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த கோரிக்கைகளை இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கம் ஏற்று எமக்கு ஒரு நிரந்தர தேர்தலை வழங்குவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன். கிட்டத்தட்ட இன்று இலங்கை தாய் மொழி ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டத்திற்கு 100 ஆசிரியர்களுக்கு மேல் வருகை தந்திருக்கின்றோம்.

நமக்கான தீர்வினை இந்த சங்கம் பெற்றுத்தருமென நாம் எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இரண்டு புதிய அமைச்சர்கள் நியமனம்!

இரண்டு புதிய அமைச்சர்கள் நியமனம்!

சுயவிபரக் கோவையை சரியாக அனுக வேண்டும்

அம்பாளிகை சத்தியசீலன் இளவாலை புனித ஹென்றியரசர் பாடசாலை கணித ஆசிரியர்,

செல்வி அம்பாளிகை என தலைப்பிட்டு எனக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. திருமணமாகி ஆறு வருடங்கள் கடக்கின்ற பொழுதும் குழந்தை செல்வம் இன்றி நான் தற்பொழுது வாழ்ந்து வருகிறேன்.

இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை | Teacher Transfer Policy

நிபந்தனையுடனான அடிப்படையில் எந்த விதமான விடுமுறைகளும் பெறாது மாகாண கல்வித் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மூன்று வருடங்கள் அங்கு சேவையாற்றினேன்.

இடமாற்றங்கள் வழங்கப்படுகின்ற பொழுது அவர்களுடைய இடமாற்றங்கள் அனைத்தையும் நான் பின்பற்றியே வந்துள்ளேன். நான் குழந்தை செல்வத்தை பெறுவதற்காக மீளவும் சிகிச்சையில் ஈடுபட்டு வருகின்றேன். என்னுடைய தாயாருக்கும் வயதாகிவிட்டது.

இது என்னுடைய பிரச்சினை மாத்திரமல்ல என்னை போன்ற நிறைய பெண்களுக்குரிய பிரச்சனை வெளியே சொல்ல முடியாது. அவர்கள் திணைக்களரீதியாக நெறிமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.

மேலதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தி எமது கோரிக்கைகளை பரிசீலித்து நடக்க வேண்டும். எமது சுயவிபரக்கோவைகளை சரியாக அணுகவேண்டும். என்னை செல்வி என்று குறிப்பிட்டு செல்வி என்றால் பிரச்சினை இல்லை என குறிப்பிட்டுள்ளனர். ஆகவே இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கம் இது குறித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


சிறையிலுள்ள மகிந்தானந்தவுக்கு ஓய்வூதியம்.. அரசியல் தரப்பில் முனுமுனுக்கப்படும் தகவல்!

சிறையிலுள்ள மகிந்தானந்தவுக்கு ஓய்வூதியம்.. அரசியல் தரப்பில் முனுமுனுக்கப்படும் தகவல்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US