மட்டக்களப்பில் மாணவியை தொந்தரவு செய்த ஆசிரியருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Sri Lanka Police Batticaloa Eastern Province Sri Lankan Schools
By Bavan Aug 20, 2024 02:22 PM GMT
Report

மட்டக்களப்பில் (Batticaloa) மாணவி ஒருவரை வார்த்தைகள் மூலமாக தொந்தரவு செய்து வந்த ஆசிரியரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (20.08.2024) வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பில் பெண்கள் பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவருக்கு கற்பித்துவரும் ஆசிரியர் ஒருவர் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பாலியல் துஸ்பிரயோகம் கொண்ட வார்த்தைகளை பிரயோகித்து வந்துள்ளார்.

ஜேர்மனியில் வேலை வாய்ப்பு என கூறி பண மோசடி: சந்தேக நபரொருவர் கைது

ஜேர்மனியில் வேலை வாய்ப்பு என கூறி பண மோசடி: சந்தேக நபரொருவர் கைது

ஜனாதிபதிக்கு கடிதம்

இது தொடர்பாக குறித்த ஆசிரியர், எவருக்கும் தெரிவித்து என்னை ஒன்றும் செய்யமுடியாது, உயர்தர மாணவி பாலியல் துஸ்பிரயோகம் என முகநூலில் பதிவிடுவேன் எனவும் தான் ஒரு அரசியல் கட்சி சார்ந்தவர் எனவும் என்னை எதிர்த்தால் இந்த மாவட்டத்தில் இருக்கமுடியாது எனவும் மாணவியை அச்சுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, அவரது வகுப்பாசிரியர் மற்றும் பெற்றோருக்கு தெரிவித்து வந்துள்ளார். கடந்த மாதம் 11ஆம் திகதி குறித்த ஆசிரியர் பாடத்திட்டத்தில் இல்லாத படங்களை வரையுமாறும் இல்லாவிட்டால் வகுப்பறையில் இருந்து வெளியேறுமாறும் தெரிவித்த நிலையில் மாணவி வகுப்பறையில் இருந்து வெளியேறி அதிபரிடம் முறையிட சென்றுள்ளார்.

மட்டக்களப்பில் மாணவியை தொந்தரவு செய்த ஆசிரியருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் | Teacher Remanded For Disturbing A Female Student

அதிபர் இல்லாததால் வீட்டிற்கு சென்று தனக்கு நடந்த அநீதியை அவரது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பெற்றோர் பாடசாலை பிரதி அதிபரின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டுவந்த நிலையில், அவர் பாடசாலை அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்தவுடன் பெற்றோரிடம் கடிதம் ஒன்றை வாங்கி தந்தால் தீர்வு பெற்றுதருவதாக அவர் உத்தரவளித்துள்ளார்.

இதன் பின்னர், மீண்டும் பாடசாலைக்கு மாணவி சென்ற நிலையில், குறித்த ஆசிரியர் மாணவி கல்வி கற்கும் சூழலை குழப்பிவந்துள்ளார். இதனையடுத்து, மாணவி, தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக ஜனாதிபதிக்கு சிங்கள மொழியில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

மீண்டும் விளக்கமறியல்

இது தொடர்பாக ஜனாதிபதி உடன் விசாரணை செய்யுமாறு பொலிஸாருக்கு கடந்த ஜூலை 22ஆம் திகதி பணிப்புரை விடுத்ததையடுத்து, பொலிஸார் பாதிக்கப்பட்ட மாணவியிடமும் பாடசாலை அதிபர் மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பொலிஸ் நிலையத்துக்கு குறித்த ஆசிரியரை வருமாறு அழைக்கப்பட்டபோதும் அவர் பொலிஸ் நிலையம் செல்லாது தலைமறைவாகி வந்துள்ளார்.

மட்டக்களப்பில் மாணவியை தொந்தரவு செய்த ஆசிரியருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் | Teacher Remanded For Disturbing A Female Student

இதனையடுத்து, கடந்த 7ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சிரேஸ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தலைமையிலான சட்டத்தரணிகள் ஊடாக முன் நகர்வு பத்திரம் விண்ணப்பித்து நீதிமன்றில் முன்னிலையாகிய போது இன்று 20ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதவான் இந்த சம்பவம் தொடர்பாக மீண்டும் தொடர்புடையவர்களிடம் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டதுடன் ஆசிரியரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

மட்டக்களப்பில் பொலிஸார் சுற்றிவளைப்பு: 59 பேர் கைது

மட்டக்களப்பில் பொலிஸார் சுற்றிவளைப்பு: 59 பேர் கைது

சுவிஸில் கைது செய்யப்பட்ட இலங்கை குற்றவாளி - நாடு கடத்த நடவடிக்கை

சுவிஸில் கைது செய்யப்பட்ட இலங்கை குற்றவாளி - நாடு கடத்த நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US