ஆறு அடி அளவு கொண்ட சொந்த காணியை நகரசபைக்காக விட்டுக் கொடுத்த நபர்
கிண்ணியாவில் நபரொருவர் தனது காணியின் சுமார் 6 அடி பகுதியை நகரசபைக்காக விட்டுக் கொடுத்துள்ள சம்பவம் அனைவர் கவனத்தையும் பெற்றுள்ளது.
கிண்ணியா - 05, பெருந்தெரு Panacea தனியார் வைத்தியசாலை சந்தியில் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக தங்களுடைய சுற்று மதிலை உடைத்து அகலமாக்கி தர முடியுமா என கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி கிண்ணியா வலய கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரியாக கடமை புரியும் ஜலால்தீன் நாம்தீன்யிடம் கோரியுள்ளார்.
புதிய மதில் அமைப்பு
அவரோ எந்த மறுப்பும் தெரிவிக்காது மனமுவந்து சுமார் 6 அடிக் காணியை சுற்று வளைவிற்காக விட்டு புதிய மதிலை அமைத்துள்ளார்.
அரச காணியை சட்டவிரோதமான அபகரிப்பே அதிகமாக காணப்படும் தருணத்தில் குறித்த ஆசிரியரின் செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.
                                            
                                                                                                                                    
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan