ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தின் மீது தீ வைத்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்ற விசாரணைப் பிரிவினர் குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
கிரான்திடிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜுலை மாதம் 9ஆம் திகதி இந்த தீ வைப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
இந்த நிலையிலேயே தொடர் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் மீது தீ மூட்டிய குற்றச்சாட்டில் இதுவரையில் 25 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் வீட்டுக்கு பாரியளவு சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
