டுபாயில் பதுங்கியுள்ள தரங்காவின் உதவியாளர் இலங்கையில் கைது
நான்கு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பாணந்துறை, வலபால பிரதேசத்தில் உள்ள வீதியொன்றுக்கு அருகில் சந்தேகநபரிடம் இருந்து சுமார் இரண்டு கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாணந்துறை, வலோபால பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் டுபாயில் பதுங்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் தரங்காவின் முக்கிய சீடர் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த குற்றத்தடுப்பு பிரிவினர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri