அரசு அத்தியாவசியப் பொருட்களுக்கான வரியினை நீக்க வேண்டும் - முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினர் வலியுறுத்து

Jaffna Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Economy of Sri Lanka Value Added Tax​ (VAT)
By Kajinthan Jan 02, 2024 11:58 AM GMT
Report

அத்தியாவசியப் பொருட்களுக்கான வரியினை மீளாய்வு உட்படுத்தி நீக்குவதற்கான நடவடிக்கை செய்ய வேண்டும் என முன்னாள் வட மாகாண சபையின் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று (2.1.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், புதுவருடம் தொடங்கி புதுவருட அன்றே மக்களுக்கு இலங்கை அரசாங்கம் பேரதிச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது.

நாட்டு மக்களுக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டு மக்களுக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

விலைவாசி உயர்வு

2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முதலாம், இரண்டாம் வாசிப்பிலே சமர்ப்பிக்கப்பட்ட விடயத்தில் உண்மைகளை முடிமறைத்து 97 பொருட்களின் விலைவாசி உயர்த்தியிருக்கின்றது.

அரசு அத்தியாவசியப் பொருட்களுக்கான வரியினை நீக்க வேண்டும் - முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினர் வலியுறுத்து | Tax On Essential Goods Should Be Removed

இவ்வருடத்திலே இலங்கை வாழ்மக்கள் மீது பெரும் வரிச்சுமையினை அரசு செலுத்தியுள்ளது. குறிப்பாக வரிக்குள்ளே மதுபானம், புகைத்தல், ஆடம்பர, இலத்திரனியல் பொருட்களுக்காக பொருட்களுக்கு விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் அத்தியாவசிய பொருட்களுக்கு விலை உயர்வடைந்திருப்பது பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது.

கடந்த 30 வருடம் யுத்த நடந்த போதிலும் கூட இப்படியான வரி அதிகரிக்கப்படவில்லை. விலைவாசியும் அதிகரிக்கப்படவில்லை. பொருட்தட்டுப்பாடு எற்படவில்லை.

30 வருட யுத்தத்திலும் கூட பல்லாயிரம் ரூபாய்களை செலவளித்த இவ்வரசாங்கம் 30 வருட யுத்தம் முடிந்த பிற்பாடு 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வளவு வற் வரியிலான சுமையினை மக்கள் மீது சுமத்தியுள்ளது.

ஜப்பான் நிலநடுக்கத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

ஜப்பான் நிலநடுக்கத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

ஜனநாயக விரோத பாதீடு

எற்கனவே இருந்த அரசாங்கங்களும் ஊழலுக்கு, மோசடிக்கு, துஸ்பிரயோகத்திற்கு பெயர்போன அரசாங்களுக்கு இருந்தது. மக்களால் விரட்டப்பட்ட அரசாங்கமாக காணப்பட்டது.

அரசு அத்தியாவசியப் பொருட்களுக்கான வரியினை நீக்க வேண்டும் - முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினர் வலியுறுத்து | Tax On Essential Goods Should Be Removed

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்கள் ஆதரவு பெறமால் நாடாளுமன்ற பெரும்பாண்மையினை பெற்றுக்கொண்டு வந்து ஜனநாயக விரோத பாதீட்டினை நிறைவேற்றியுள்ளார்.

குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி அதிகரிப்பானது ஏழை மக்கள், அன்றாடம் கூலித்தொழினை செய்வர்கள், வடக்கு - கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மலையக மக்களது வயிற்றில் பேரிடியாக காணப்படுகின்றது. இவ் பாதீட்டினை சமர்ப்பித்து, மக்களுக்கு எந்த பயனும் இல்லாது வாட்டிவதைக்கின்ற அரசாங்கமாக மாறியுள்ளது.

பாதீடு தொடர்பாக குரல்கொடுக்கின்றார்கள். நாடாளுமன்றத்தில் பேசக்கூடிய விடயங்களை பேசாமல், தடுத்து நிறுத்தவேண்டிய விடயங்களை தடுத்து நிறுத்தாமல், பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்கமாலும் இருந்துகொண்டு தற்போது வெளியில்வந்து மக்கள் மீது பாதீடு தொடர்பாக குரல் கொடுக்கின்றார்கள்.

கெஹேலியவின் உத்தியோகப்பூர்வ இல்லம் முன் வைக்கப்பட்ட மலர் வளையம்: வெளியான காரணம்

கெஹேலியவின் உத்தியோகப்பூர்வ இல்லம் முன் வைக்கப்பட்ட மலர் வளையம்: வெளியான காரணம்

வரிசலுகை தொடர்பாக மீளாய்வு

அரசாங்கம் வரிசலுகை தொடர்பாக மீளாய்வு செய்ய வேண்டும். உடனடியாக அத்தியாவசியப் பொருட்களுக்கான வரியினை மீளாய்வு உட்படுத்தி நீக்குவதற்கான நடவடிக்கை செய்யவேண்டும்.

அரசு அத்தியாவசியப் பொருட்களுக்கான வரியினை நீக்க வேண்டும் - முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினர் வலியுறுத்து | Tax On Essential Goods Should Be Removed

இப்போது அத்தியாவசிய பொருட்களில் வெங்காயம் 530 ரூபா விற்கின்றது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொட்டுக்கொண்டு இருக்கின்றது.

திரைமறைவிலே திட்டமிட்டு கபடமாக கொண்டுவந்து மக்கள் மீது சுமத்தப்பட்ட வரியினை நீக்கவேண்டும்.

நீக்கதவறும் பட்சத்தில் தென்னிலங்கை மக்களும், நாடு பூராக வசிக்கும் மக்களும் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். அது மக்கள் போராட்டமாக வெடிக்கும் என தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் தரையிறங்கிய விமானத்தில் திடீரென பற்றிய தீயினால் பரபரப்பு

ஜப்பானில் தரையிறங்கிய விமானத்தில் திடீரென பற்றிய தீயினால் பரபரப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US