இலங்கை மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சி! இறக்குமதி செய்யப்படும் 600 பொருட்களின் வரி அதிகரிக்கும் வாய்ப்பு?
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியமற்ற 600 ஆடம்பர பொருட்களுக்கான வரியை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கியின் ஆளுநரினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த ஆடம்பரப் பொருட்களின் முழுமையான பட்டியலை முன்வைத்து அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த பொருட்களின் இறக்குமதியை ஊக்கப்படுத்தாமல் இருப்பதற்காக அரசாங்கம் இந்த பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை ஓரளவிற்கு அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது.
மத்திய வங்கி ஆளுநரின் பட்டியலில் உள்ளடங்காத அத்தியாவசியமற்ற வேறு ஏதேனும் ஆடம்பர பொருட்கள் உள்ளதா என இலங்கை மத்திய வங்கி தற்போது ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 19 மணி நேரம் முன்
தகாத உறவில் இருந்ததாக கூறிய பத்திரிக்கையாளர்... செருப்பால் அடிப்பேன் என விளாசிய தாமரைச் செல்வி Cineulagam
ஸ்ரீலீலா ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. ஷார்ட் உடையில் பார்பி போல வந்த வீடியோ Cineulagam