சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு! சிறீதரனும் அழைப்பு
நாளைய சுதந்திர தினத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள போராட்த்திற்கு தாமும் முழுமையான ஆதரவினை வழங்குவதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை அவருடைய இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காத நிலையில் நாளைய தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரை கைது செய்ய உத்தரவு..! சர்வதேச பிடியாணையில் அதிரடியாக களமிறங்கும் அதிகாரிகள்
ஆதரவு கோரும் தமிழரசுக் கட்சி..
பல்கலைக்கழக மாணவர்கள் நாளையதினம் முன்னெடுக்கும் போராட்டமானது மிகவும் பெறுமதியானயானது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நாம் இனப்படுகொலை செய்யப்பட்ட இனம் எமக்கு இந்த நாட்டில் சமஷ்டி முறையிலாக தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகள் 07 ஆண்டுகளைத் தாண்டியும் தீர்க்கப்படவில்லை.
எனவே சுதந்திர தினத்தன்று இடம்பெறும் கரிநாளுக்கு வர்த்தக சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, நாளை வரும் இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாக அனுஷ்டித்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் அழைப்புக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னுடைய முழு ஆதரவை வழங்கியிருக்கின்றது.
இது தொடர்பில் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில், இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தமது கட்சியும் முழு ஆதரவு வழங்குவதாகத் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் - ராகேஷ்
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 4 மணி நேரம் முன்
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri