அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 46 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அண்மையில், இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட குறித்த இலங்கையர்கள், அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மீள் வருகை
நாடு கடத்தப்பட்ட அவர்கள், அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம், இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலை
சிலாபத்தை சேர்ந்த குறித்த நபர்கள், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி, நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan