48 மணிநேர பேச்சுவார்த்தையின் அடுத்த நகர்வு! காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை - ஆளுநரை சந்திக்கும் த.வெ.க
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தவெக தலைவர் விஜய் இன்று மாலை 3.30 மணிக்கு சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின்போது ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க விஜய் உரிமை கோருவார் என்றும், மேலும் பெரும்பான்மைக்கு தேவையான கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தவெகவு ஆட்சி அமைக்க காங்கிரஸ் முழு ஆதரவு
கேரளம் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அங்கு அவர் அதற்கான பணிகளில் ஈடுப்பட்டுள்ளார்.

இதனால் ஆளுநர் அர்லேகர் தற்போது கேரளாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
அதாவது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது.
நாளை முதலமைச்சராக பதவி ஏற்க வாய்ப்பு
108 இடங்களை வென்றுள்ள தவெக, ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும் சூழலில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை கடந்த 48 மணிநேரமாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை அமைப்பதற்கு முழு ஆதரவை காங்கிரஸ் அளித்துள்ளது.

த.வெ.க.வை ஆதரிப்பதாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 5 பேரும் கையெழுத்திட்டுள்ளதாக கடிதத்தையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்கும் பட்சத்தில் நாளை நேரு ஸ்டேடியத்தில் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகின்றது.
பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்..! காலக்கெடுவை நெருங்கும் த.வெ.க விஜய் - பின்னணியில் அவசர பேச்சுவார்த்தைகள்
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam