கடல் கொந்தளிப்பு காரணமாக நெடுந்தீவில் கரையொதுங்கிய தமிழக கடற்தொழிலாளர்களின் படகு
நிலவும் சீரற்ற காலநிலையால் நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாக தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளது.
இதன்போது படகில் இருந்த 11 கடற்தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கடற்தொழிலாளர்கள் மீட்பு
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற கடற்படையினர் படகில் இருந்த கடற்தொழிலாளர்களை மீட்டுள்ளனர்.

படகினை மயிலிட்டி மீன்பிடித்துறைமுக பகுதிக்கு எடுத்துள்ள செல்ல கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட 11 இந்திய மீனவர்களும் தற்போது கடற்படையினரின் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், நெடுந்தீவுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
அத்துடன், மீட்கப்பட்ட கடற்தொழிலாளர்களை, கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் மற்றும் புகைப்படங்கள் - ராகேஷ்


