ஒற்றையாட்சி அரசமைப்பையே கோருகின்றதாம் தமிழரசுக் கட்சி
தமிழ் மக்கள் நிராகரித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியே கைவிட்டதாகக் கூறிய ஒற்றையாட்சி அரசமைப்பையே தற்போது அந்தக் கட்சி வலியுறுத்தி வருகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழரசுக் கட்சி
அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையே நடைபெற்ற பேச்சு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தச் செயற்பாடானது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் துரோகச் செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த தேர்தலில் தோற்றவர்கள் இப்போது பின்வாசலால் பிரவேசித்து தமிழரசுக் கட்சியில் அரசியல் செய்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களும் தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியுடன் அண்மையில் நடந்த சந்திப்பில் தமிழரசுக் கட்சியினர் ஒற்றையாட்சியையே வலியுறுத்தினர் என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri