ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழரசு கட்சியின் வேட்புமனுக்கள்: சுமந்திரன் நம்பிக்கை
எங்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நாங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததால் அவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று(20.03.2025) இரவு ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சி சிறியதொரு பின்னடைவை சந்தித்தது போன்ற ஒரு தோற்றப்பாடு காணப்பட்டது.
எனினும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்து தமிழ் தேசத்தின் இருப்பை நிலைநாட்ட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |