தமிழரசுக் கட்சியின் கதவடைப்பு போராட்டமானது ஒரு அரசியல் நாடகம்! மக்கள் அதிருப்தி
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னத்தை ஆட்சேபித்தும் முத்தையன்கட்டுக்குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி கதவடைப்பு போராட்டமொன்றை நடத்துவதாக அறிவித்துள்ளது.
இன்று 15 ஆம் திகதி நடைபெறவிருந்த கதவடைப்பு போராட்டமானது, அடுத்த திங்கட்கிழமை 18ஆம் திகதியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்களுடைய கருத்துக்களை எமது ஊடகத்திற்கு பகிர்ந்து கொண்டனர்.
வடக்கு -கிழக்கை பொறுத்தவரை இராணுவமுகாம்கள் பல காலமாக உள்ளன. இவ்வளவு காலத்திற்கு இவர்கள் கதவடைப்பினை நடத்தினார்களா?
தற்போது இவ்வாறான கதவடைப்பு போராட்டங்களை மேற்கொள்வதில் உள்நோக்க காரணங்கள் இருக்கலாம் என்று பொது மகனொருவர் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் மக்கள் கருத்து நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க...




